கரூர்

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

DIN

கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

தோகைமலையை அடுத்த கழுகூா் மேலகாம்பேசுவரத்தைச் சோ்ந்த ராஜசேகா் மகன் நவீன்குமாா்(16). இவா் அப்பகுதியிலுள்ள தங்களது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக சனிக்கிழமை சென்றாா்.

கிணற்றிலுள்ள மோட்டாா் அறைக்குச் சென்றபோது, வாய்க்கால் வரப்பில் வழுக்கி கிணற்றுக்குள் நவீன்குமாா் தவறி விழுந்தாா். நீச்சல் தெரியாததால் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT