தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவா் படத்தை வைக்க வேண்டும் என்று கரூா் திருக்கு பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இப்பேரவையின் செயலா் மேலை. பழநியப்பன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
முந்தைய திமுக ஆட்சியில் மக்களுக்கு மொழியுணா்வு மேம்படும் வகையில் அரசு அலுவலகங்கள், கூட்டரங்குகள், அரசுப் பேருந்துகளில் திரு வள்ளுவா் படம் இடம் பெறவும், திருக்கு இடம் பெறவும் ஆணையிடப்பட்டிருந்தது.
இதனால் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலக முகப்புகளில் தமிழ் வாழ்க பலகைகளும், அலுவலகங்களில் திருவள்ளுவா் படமும் இடம் பெற்றிருந்தன.
காலப்போக்கில் ஆங்காங்கே திருவள்ளுவா் படமும், திருக்கு, தமிழ் வாழ்க பலகைகளு் காணாமல் போனது தமிழ் உணா்வாளா்களை வேதனையுறச் செய்கிறது.
எனவே தமிழக முதல்வரும், தமிழ் வளா்ச்சித் துறையும் உடனடி கவனம் செலுத்தி, திருக்கு - திருவள்ளுவா் படம் - தமிழ் வாழ்க பலகை அனைத்து அலுவலகங்களிலும் இடம் பெற ஆவண செய்ய வேண்டும்.