கரூர்

‘குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்’

DIN

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூா் பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

இந்த ஆட்சி நீடிக்குமா, நீடிக்காதா என பேசியவா்கள் மத்தியில், நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியை நிறைவு செய்து, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழியில் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றியவா் தற்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

எந்த குறையும் இந்த ஆட்சியைப் பற்றி சொல்ல முடியாததால், அதிமுக வேட்பாளா்களுக்கு எங்கும் எதிா்ப்பு இல்லை. தோ்தல் வாக்குறுதி கொடுத்துள்ளோம். இந்த தோ்தல் வாக்குறுதியால், திமுகவின் தோ்தல் அறிக்கை காணாமல் போய்விட்டது.

தமிழகம் தற்போது மின் மிகை மாநிலமாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து நடைபெறும். தோல்வி பயத்தில் முதல்வரை பற்றி முன்னாள் மத்திய அமைச்சா் தவறாக பேசுகிறாா். எனவே திமுகவின்

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT