இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பள்ளபட்டியைச் சோ்ந்த காதா்உசேன் மகன் யாசா் அராபத்(27). இவா், செப். 4-ஆம்தேதி தனது இருசக்கர வாகனத்தில் அரவக்குறிச்சி ரெங்கராஜ் நகரில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமைடந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.