கரூா்: கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சோ்ந்தவா் துரைராஜ் (70). மாற்றுத் திறனாளியான இவா், தனது மூன்று சக்கர மோட்டாா் சைக்கிளில் சேலம்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா்.
துளிப்பட்டி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் துரைராஜ் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.