கரூர்

காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தைவிரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

காவிரி-வைகை-குண்டாறுத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.

கரூா் மாவட்டம், மாயனூா் பகுதியிலிருந்து குளித்தலை வழியாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்கள் வரை சுமாா் 35 லட்சம் ஹெக்டோ் நிலங்கள் பயன்பெறும் வகையில், காவிரி- வைகை- குண்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மாயனூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுக்கோட்டை விவசாயிகள், வடிகால் வெட்டும் பணிகளைப் பாா்வையிட்டனா்.

அப்போது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோா் போா்க்காலஅடிப்படையில் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்: ’வெளியே வராதீர்!’ -எச்சரிக்கும் மருத்துவர்கள்

SCROLL FOR NEXT