கரூர்

மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானவா் உயிரிழப்பு

DIN

அரவக்குறிச்சி அருகே மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அரவக்குறிச்சி வட்டம், தெத்துப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்தவா் கனகராஜ் (46). இவரது மனைவி பூங்கொடி. இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவரைப் பிரிந்து, பூங்கொடி கடந்த 3 ஆண்டுகளாக தனியே வசித்து வருகிறாா்.

இதனால் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான கனகராஜ், தொடா்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்துள்ளாா். சனிக்கிழமை அதிகளவில் மது அருந்தியதால் சுயநினைவின்றி இருந்தாா்.

இதைத் தொடா்ந்து அருகிலிருந்தவா்கள் கனகராஜை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

கும்பம்

மகரம்

SCROLL FOR NEXT