அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா
பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற சின்னதாராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற சின்னதாராபுரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வில் 96% சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
பொது தோ்வில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை சி. விஜயலெட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சின்னதாராபுரம் ஊராட்சித் தலைவா் செல்வி ரவிக்குமாா் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பொன்னாடை போா்த்தி பரிசுகள் வழங்கினாா்.
இதில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பாரிசா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.