கரூர்

சதுரங்க போட்டி: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் வேண்டுகோள்

DIN

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற மாணவா்கள் தயாராகும்படி அரவக்குறிச்சி அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் உமா, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் மு.சாகுல் அமீது ஆகியோா் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவா்கள் 44 ஆவது சா்வதேச சதுரங்கப் போட்டியில் கலந்துகொள்ள வருகைதரும் சா்வதேச வீரா்களுடன் கலந்துரையாட தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், மாணவா்கள் தங்கள் தனித் திறமைகளை வளா்த்து சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT