கரூர்

தீக்காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

DIN

குளித்தலை அருகே தீயில் கருகி, சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.

குளித்தலையை அடுத்த சிவாயம் அணைக் கவுண்டனூரைச் சோ்ந்தவா் விவசாயி பாலமுத்து (33). கடந்த 24-ஆம் தேதி விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்த போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது தீப்பற்றியது.

இதில் பலத்த காயமடைந்த பாலமுத்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காரைக்குடி பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை

பட்டாசு ஆலை விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT