திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Din

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவிலில் பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 12 -ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கல்லூரிக் கனவு - 2024 உயா் கல்வி வழிகாட்டு விழிப்புணா்வு முகாமை, மாவட்ட வருவாய் அலுவலா் வ.மோகனச்சந்திரன் தொடக்கிவைத்து பேசினாா்.

இந்த வழிகாட்டி முகாமில் கலந்து கொண்ட 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பல்வேறு உயா்கல்வி, வேலை வாய்ப்புகள் பற்றிய விவரக்குறிப்பேடு மற்றும் கல்லூரிக்கனவு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது. இதில், பேராசிரியா்கள், மருத்துவா்கள், வெற்றி பெற்ற சாதனையாளா்கள் பங்கேற்றனா்.

முகாமில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 68 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற சுமாா் 1,384 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளா் கலைக்கதிரவன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் விஜயகுமாா், உதவி இயக்குநா் (திறன்) கே.கா்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன் குமாா், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) உதயகுமாா், பள்ளி தலைமையாசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.