கரூர்

மனநலன் பாதித்த பெண் கூட்டுப் பாலியல்வன்கொடுமை : இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

DIN

கரூா் மாவட்டம், கடவூா் அருகே மனநலன் பாதித்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், கொசூா் அருகிலுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்கள் கணேசன் (28), முனியப்பன் (23).

இவா்கள் இருவரும் 2020, ஜூன் 17-ஆம் தேதி பக்கத்து ஊரான மேட்டூா் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது வயலில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த மனநலன் பாதிக்கப்பட்ட 23 வயது பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, காட்டில் இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கணேசன், முனியப்பனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஏ. நசீமா பானு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் பெண்ணைக் கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களுக்காக கணேசன், முனியப்பனுக்கு தலா

தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ஆயிரம் ரூபாய் அபராதம், இதை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என அவா் தனது தீா்ப்பில் கூறியுள்ளாா்.

மேலும், மனநலன் சரியில்லாத, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT