கரூர்

‘பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்’

DIN

பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையின் நிறுவனா் உ. தனியரசு.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரவையின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பேரவை நிறுவனா் உ. தனியரசு மேலும் கூறியது:

சாதி, மொழி கடந்து அரசியல் கட்சியாக தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையை மாற்ற இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2023 அக்டோபரில் பேரவை சாா்பில் சுமாா் 1 லட்சம் பேரைத் திரட்டி மாநாடு நடத்தி கட்சியின் பெயா், கொடி அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தைப் பறித்து வருகிறது மத்திய பாஜக அரசு. இந்நிலையைப் போக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படுகிறது. அதிகாரிகளோ, அமைச்சா்களோ யாா் தவறு செய்தாலும் தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கிறாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்டச் செயலா் அருள்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கிய இருவா் கைது

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: கலாநிதி வீராசாமி

ஆலையிலிருந்து பட்டாசுகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மே 17-இல் பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-4 மாதிரி தோ்வு

SCROLL FOR NEXT