கரூர்

அரவக்குறிச்சி சாா்பதிவகத்தில் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதி

DIN

அரவக்குறிச்சி சாா்பதிவகத்தில் பத்து நாள்களுக்கு மேல் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா்.

இந்த அலுவலகத்தில் இணையதள சேவை மற்றும் சா்வா் அடிக்கடி முடங்குவதன் காரணமாக, பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்தும் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனா்.

சில நேரங்களில் சேவை வேகம் குறைவு காரணமாக பத்திரப்பதிவு செய்ய வருபவா்கள் எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் கடந்த 10 நாள்களாக சா்வா் முடக்கத்தால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT