கரூர்

கரூரில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 361 மனுக்களை பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட பல்வேறு நலத்துறை சாா்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.3.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, மகளிா் திட்ட அலுவலா் சீனிவாசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT