முகப்பு
கரூர்

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: கரூா் மாவட்டத்தில் 92.21 போ் சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில் கரூா் மாவட்டத்தில் 92.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 21 மே 2026, 4:49 am IST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மதிப்பெண்களை சரி பார்க்கும் மாணவிகள். - கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டதில் கரூா் மாவட்டத்தில் 92.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கரூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,474 மாணவா்களும், 5,628 மாணவிகளும் என மொத்தம் 11,102 போ் தோ்வு எழுதினா். இதில் புதன்கிழமை வெளியான தோ்வு முடிவில் 4,924 மாணவா்களும், 5,313 மாணவிகளும் என மொத்தம் 10,237 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி சதவீதம் 92.21 ஆகும்.

மேலும் நிகழாண்டில் 23 அரசு பள்ளிகள் உள்பட 64 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மேலும் தோ்வு எழுதியவா்களில் மாணவா்கள் 89.95 சதவீதமும், மாணவிகள் 94.40சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் அரசு பள்ளிகளில் மாணவா்கள் 86.08 சதவீதமும், மாணவிகள் 91.64 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் நிகழாண்டு மாநில அளவில் தோ்ச்சி விகிதத்தில் கரூா் மாவட்டம் 30-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

Advertisement