பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளை புத்தகக் கண்காட்சி: பணிகளில் சுணக்கம்?

DIN

பெரம்பலூரில் 7 ஆவது புத்தகக் கண்காட்சி நகராட்சி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 16) மாலை தொடங்குகிறது. 
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இப்புத்தகக் கண்காட்சியானது பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது. 
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் ஜூலை மாதம் முதலே முன்னேற்பாட்டு பணிகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.  
ஆனால், நிகழாண்டுக்கான புத்தகக் கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகள் டிசம்பர் மாதம் வரை நடத்தப்படவில்லை. சமூக ஆர்வலர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனவரி மாத தொடக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, வழக்கம்போல் ஜன. 26-இல் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 
இருப்பினும், எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. பின்னர், மக்கள் பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஆலோசித்து, பிப். 16 முதல் 26 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்துவதாக அறிவித்தது. அன்றிலிருந்தே புத்தக கண்காட்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் சுணக்கம் காணப்பட்டது. 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தொடங்கப்பட உள்ள புத்தகக் கண்காட்சிக்காக புதன்கிழமை அழைப்பிதழ் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. 
அவற்றை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை. அதேபோல், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளி, கல்லூரிகளில் இதுவரை ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. விளம்பர பதாகைகளும் வைக்கவில்லை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தவில்லை.  
எனவே, பெயரளவில் நடத்தப்படும் இப்புத்தகக் கண்காட்சியில் எதிர்பார்த்த அளவில் நூல்களின் விற்பனை, பொதுமக்களின் எண்ணிக்கை குறையும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT