பெரம்பலூர்

அனுமதியின்றி மணல் எடுக்க சென்ற கல்லூரி மாணவர் சாவு

DIN


பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் வட்டத்துக்குள்பட்ட எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் துரை (40). இவருக்குச் சொந்தமான டிராக்டரை வெள்ளிக்கிழமை இரவு எடுத்துக்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான முத்து மகன் வெங்கடேசன் (20),  இவரது நண்பர்கள் கார்த்திக் (18), ரமேஷ் (18), அஜித் (16), ரஞ்சித் (18) ஆகியோர் பென்னக்கோணம் கிராமத்தில் ஓடும் சின்னாற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுக்கச் சென்றனராம். அப்போது, சுமார் 5 அடி ஆழ பள்ளத்தில் மணல் எடுக்க வெங்கடேசன் கீழே இறங்கினாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்ததில் மணலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட வெங்கடேசனை அவரது நண்பர்கள் மீட்டனர்.
ஆனால், மூச்சுச் திணறலால் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கொண்டு வந்து வீட்டுக்கு வெளியே போட்டு விட்டு அவரது நண்பர்கள் தப்பி விட்டனராம். தகவலறிந்த மங்களமேடு போலீஸார் வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். 
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT