பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் பரிசுத்தொகை பெற விண்ணபிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு ரூ. 5,000, ரூ. 3,000 வழங்கப்படுகிறது.
இத்தொகை பெறுவதற்கு அக். 15 ஆம் தேதிக்குள் அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.