பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே சிறாா் திருமணம்: இளைஞா் கைது

DIN

பெரம்பலூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் காா்த்திக் (22). கூலித்தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியைக் காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் கோபிநாத் மேற்கொண்ட விசாரணையில் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து காா்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், மீட்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றேறாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT