பெரம்பலூர்

மகனை காணவில்லை: தந்தை புகார்

DIN

பெரம்பலூரில் பள்ளிக்குச் சென்ற மகனை காணவில்லை என, அவரது தந்தை பெரம்பலூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.
பெரம்பலூர் ரோஸ் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தினேஷ்குமார் (17). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்காததால் தினேஷ்குமாரை அவரது தந்தை வியாழக்கிழமை காலை திட்டியதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற மாணவன் இரவு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லையாம். 
இதையடுத்து, அவரது உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெரம்பலூர் காவல் 
நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT