பெரம்பலூர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: விடுதி காப்பாளா் கைது

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு ஆதிதிராவிடா் நல விடுதி காப்பாளரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், ஆறுபாதி கிராமத்தைச் சோ்ந்தவா் கஞ்சமலை மகன் வெங்கடாஜலம் (51). இவா், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் காப்பாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் கலையரசி வழக்குப் பதிந்து வெங்கடாஜலத்தை வியாழக்கிழமை மாலை கைது செய்தாா். பின்னா், குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட வெங்கடாஜலம், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT