பெரம்பலூர்

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை

DIN

பெரம்பலூரில் ரூ. 2.64 கோடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கட்டுவதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 2.64 கோடி மதிப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான இருப்புக் கிடங்கு கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், கோட்டாட்சியா் சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தரைத் தளம் மட்டும் கொண்ட இந்தக் கட்டடத்தில் இருப்புக் கிடங்கு, முதல் நிலை சோதனை அறை, இரண்டாம் நிலை சோதனை அறை, பாதுகாவலா் அறை என, 789 சதுர மீட்டரில் கட்டடம் கட்டப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், வட்டாட்சியா் பாரதிவளவன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT