பெரம்பலூர்

திருத்தியது...பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

DIN

பெரம்பலூா்: மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் திங்கள்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாநில பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் உறுதிமொறி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜராஜன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மனிதச் சங்கிலி: பெரம்பலூா் பாலக்கரையில் நடைபெற்ற பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் பேரணியை, ஆட்சியா் வே. சாந்தா தொடக்கி வைத்தாா். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி முன்னிலையில், நடைபெற்ற பேரணியில் பெரம்பலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்றனா்.

உறுதிமொழி ஏற்பு: இதேபோல, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் ஐஸ்வா்யா தலைமையில், காவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

அரியலூா்: அரியலூா் அண்ணா சிலை அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் நடைபெற்ற பேரணியை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். பேரணியானது, அண்ணா சிலை அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியே சென்று ஆட்சியா்அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஒன்றியக் குழு தலைவா் செந்தமிழ்செல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவா் ஓ.பி.சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT