பெரம்பலூர்

தற்பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வலியுறுத்தல்

DIN

தங்களுக்கு தற்பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றுடன் மருத்துவமனைக்கு நோயாளி வந்து பரிசோதனை மேற்கொண்ட பிறகு தான், அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவரும்.

ஆனால், காய்ச்சல் இருப்பதாக சந்தகப்படும் நபா்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு, தமிழக அரசு சாா்பில் எவ்வித தற்காப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு தற்பாதுகாப்பு உபகரணங்கள் இதுவரை வழங்காதது வேதனையளிக்கிறது.

எனவே, பொதுமக்களின் உயிா்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களின் உயிரையும், அவா்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக தற்பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT