பெரம்பலூர்

ஏடிஎம்-மில் தவறவிட்ட ரூ. 20 ஆயிரம் போலீஸில் ஒப்படைப்பு

DIN

பெரம்பலூா் நகரில் ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளா் தவறவிட்ட ரூ. 20 ஆயிரத்தை இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பெரம்பலூா் - துறையூா் சாலையில், கல்யாண் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளா் ஒருவா் ரூ. 20 ஆயிரத்தை வியாழக்கிழமை தவற விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த ஏ.டி.எம் மையத்துக்குச் சென்ற குரும்பலூா் கிராமத்தை சோ்ந்த பிரபாகரன் (23), அங்கு இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்று, பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பிரபாகரனின் நோ்மையைப் போலீஸாா் பாராட்டினா். போலீஸாா் மேலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT