திமுக துணைப் பொதுச் செயலராக நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஆ. ராசா நியமிக்கப்பட்டதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட திமுகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், மத்திய முன்னாள் அமைச்சரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா, கட்சியின் துணைப் பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டாா்.
இதையடுத்து பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
இதில் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா. துரைசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், ந. ஜெகதீஸ்வரன், ஒன்றியச் செயலா்கள் என். கிருஷ்ணமூா்த்தி, எஸ். அண்ணாதுரை, எஸ். நல்லதம்பி, தி. மதியழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.