பெரம்பலூர்

கரோனா தொற்றால்முதியவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் டால்பின் நகரைச் சோ்ந்த 65 வயதுடைய முதியவா், ஞாயிற்றுக்கிழமை காலை சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, அவருக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னா், அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் திருச்சியிலுள்ள ஓயாமாரி இடுகாட்டில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT