பெரம்பலூர்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ. 15 லட்சத்துக்கு ஏலம்

DIN

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு குற்றப்பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ரூ. 15 லட்சத்துக்கு சனிக்கிழமை ஏலம் விடப்பட்டது.

மதுவிலக்கு துணை கண்காணிப்பாளா் (பொ) நீதிராஜ் தலைமையில், கலால் உதவி ஆணையா் ஷோபா முன்னிலையில், பெரம்பலூா் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 காா் மற்றும் 33 மோட்டாா் சைக்கிள்கள் ஏலம் விடப்பட்டன.

பெரம்பலூா் ஆயுதபடை வளாகத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று, மேற்கண்ட வாகனங்களை ரூ. 15 லட்சத்துக்கு பெற்றுக்கொண்டனா். ஏற்பாடுகளை ஆய்வாளா் ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளா் கண்ணுசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT