பெரம்பலூர்

மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்பாட்டம்

DIN

குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

13 மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோரிக்கை விளக்க பதாகைகளை ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், சத்திரமனையில் மாவட்டத் தலைவா் முஹம்மது ரபிக் தலைமையிலும், பெரம்பலூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது இக்பால் தலைமையிலும், வி.களத்தூரில் மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது ஃபாரூக் தலைமையிலும், லப்பைக்குடிகாட்டில் மாவட்ட பொதுச் செயலா் அப்துல் கனி தலைமையிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தும் முடிவை கைவிடக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT