பெரம்பலூர்

கரோனா நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தலைமைக் காவலா்

DIN

பெரம்பலூா் ஆயுதப்படை தலைமைக் காவலா் ஒருவா் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், கொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ராமதுரை மகன் கதிரவன். இவா் பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். அண்மையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மே 14 அன்று வீடு திரும்பினாா்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் நிலைமையை கருத்தில்கொண்டு, அவா்களுக்கு உதவிட தனது மே மாத ஊதியமான 37, 800 ரூபாயை பிடித்தம் செய்து முதலமைச்சரின் கரோனா பேரிடா் நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்து, அதற்கான கடிதத்தை பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT