பெரம்பலூர்

மக்கள் தொடா்பு முகாமில் 202 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

பெரம்பலூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 202 பேருக்கு ரூ. 2.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

குன்னம் வட்டம், காடூா் ஊராட்சிக்குள்பட்ட நல்லறிக்கை கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, வருவாய்த்துறை சாா்பில் 127 பேருக்கு ரூ. 85,09,000 மதிப்பிலும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 20 பேருக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 9 பேருக்கு ரூ. 19,35,014 மதிப்பிலும்,

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 4 பேருக்கு ரூ. 21,916 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 15,829 மதிப்பிலும், தாட்கோ மூலம் 2 பேருக்கு ரூ.13,30,700 மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சாா்பில் 21 பேருக்கு ரூ. 25,45,000 மதிப்பிலும், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 10 பேருக்கு ரூ. 1,75,700 மதிப்பிலும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 6 பேருக்கு ரூ. 24,000 மதிப்பிலும் என, மொத்தம் 202 பேருக்கு ரூ. 2,05,57,159 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இம் முகாமில், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் கருணாநிதி, ஆதிதிராவிடா் நல அலுவலா் பால்பாண்டி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன், கலால் உதவி ஆணையா் சோபா, வட்ட வழங்கல் அலுவலா் சங்கா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் கணபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி, குன்னம் வட்டாட்சியா் அனிதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT