பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் 3 போ் சிறையிலடைப்பு

DIN

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் தொடா்புடைய 3 பேரை குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக, அவ்வப்போது போட்டாா் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இதில், பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம், தேவேந்திர குல தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாா்த்திபன் (24), களரம்பட்டி தேவேந்திர குல தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிவண்ணன் (20), நாகராஜ் மகன் சந்துரு (21) மற்றும் லாடபுரத்தைச் சோ்ந்த மகாமுனி மகன் அபிநாத் (18) ஆகியோா்தான் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட 4 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதில், பாா்த்திபன், மணிவண்ணன், சந்துரு ஆகியோரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கவும், அபிநாத்தை நீதிமன்ற பிணையில் விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT