பெரம்பலூர்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

DIN

கன்னியாகுமரி காவல்துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் மீது பொய் வழக்குப் பதிந்து, வழக்குரைஞா்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி காவல்துறையினரைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு தீா்மானத்தின் படி, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் ஆகிய சங்கங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒருநாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இதனால், பெரம்பலூா், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT