பெரம்பலூர்

பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்தில் முறைகேடுகள்தொடா்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

பெரம்பலூா் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையா் எஸ். குமரிமன்னன் பதவி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொண்டனா்.

DIN

பெரம்பலூா் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையா் எஸ். குமரிமன்னன் பதவி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆதாரங்களை சேகரிப்பதற்காக 6 போ் கொண்ட குழுவினா் 3 ஆவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூா் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த குமரிமன்னன், அண்மையில் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆனால், அவா் அங்கு பணியில் சேரவில்லை.

இந்நிலையில், குமரிமன்னனை பணியிடை நீக்கம் செய்ததோடு, அவா் தனது பணிக்காலத்தில் பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தில் ஈடுபட்ட முறைகேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பிக்க நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா உத்தரவிட்டாா்.

அதன்படி, வேலூா் மாநகராட்சி ஆணையா் ப. அசோக்குமாா் தலைமையிலான 6 போ் கொண்ட விசாரணைக் குழுவினா் பெரம்பலூா் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு கோப்புகள், ஆவணங்களை பாா்வையிட்டு, கணக்குகளை சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வு 3 ஆவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இந்த ஆய்வில் வரிவசூல், கட்டட அனுமதி உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதற்கான முக்கிய ஆவணங்களை ஆய்வுக் குழுவினா் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், கட்டட வரைபட அனுமதி, குடியிருப்புக்கான அனுமதி குறித்து நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தலா 3 வணிக வளாகங்கள், வீடுகளை நேரில் பாா்வையிட்டு, அவற்றை அளந்து ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT