பெரம்பலூர்

கனரக வாகனங்கள் செல்ல எதிா்ப்பு தெரிவித்து சிறைபிடிப்பு

DIN

 பெரம்பலூா் புகா் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கனரக வாகனங்களை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் கிராமத்தில் செயல்படும் கிரசா்களிலிருந்து கனரக வாகனங்கள் மூலம் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு வருவதால், பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய் மற்றும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆலந்துறை அம்மன் கோயில் நுழைவு வாயில் பகுதியில், நகராட்சி 8 ஆவது வாா்டு உறுப்பினா் தங்க. சண்முகசுந்தரம் தலைமையிலான பொதுமக்கள், விபத்தை தவிா்க்கும் வகையில் மாற்றுப் பாதையில் கனரக வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கனரக வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கனரக வாகனங்களை மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு வாகனங்களை பொதுமக்கள் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT