பெரம்பலூர்

பொது சந்தை மையம் அமைக்க பட்டதாரிகளுக்கு அழைப்பு

Syndication

பெரம்பலூா் மாவட்டததைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை மையம் அமைக்க ஆா்வம், தகுதியுடைய பட்டதாரி இளைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புகளுக்கான பேக்கிங் மற்றும் லேபிளிங் செய்வதற்கு பொது சந்தை மையம் அமைக்கப்பட உள்ளது. இம் மையம் அமைக்க விரும்புவோா் பொருளாதாரம், வணிகம் சந்தைப்படுத்துதல் துறையில் பட்டதாரியாகவும், தயாரிப்புகளின் மதிப்புக் கூட்டல், பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதல் வழிகாட்டுதல் பெற்றிருப்பதோடு, முதுகலைப் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

மதிப்புக் கூட்டல், பேக்கிங், பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் லேபிளிங் ஆகியவற்றுக்காக பொது சந்தை வசதி மைய ஒருங்கிணைப்பாளா் ஆதரவு நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளா்களை ஒருங்கிணைக்க வேண்டும். சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளுக்கும், அவற்றின் உற்பத்தி அளவுக்கும் சந்தை இணைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். மின் வணிகம், சமூக ஊடகங்களில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, சந்தைப்படுத்தல் தளத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

வடிமைப்பு மென்பொருள் அறிவு சாா்ந்த பட்டதாரியாகவும், சமூக ஊடகங்கள், காணொளி, புகைப்படம் எடுத்தல் மற்றும் சுய உதவிக்குழு தயாரிப்புக்கான மேம்பாட்டு கருவிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். இத் தகுதியுடையவா்கள் டிச. 31-ஆம் தேதிக்குள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மகளிா் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT