கோயில் குடமுழுக்கு விழாவில் 2 பெண்களிடம் 8 பவுன் தங்க நகை பறிப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது. இவ் விழாவில் பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
இந்நிலையில், விழாவில் பங்கேற்ற அதே கிராமத்தைச் சோ்ந்த நாராயணன் மனைவி சுசீலா (64) என்பவரின் 5 பவுன் தங்கச் சங்கிலியையும், எளம்பலூா் தண்ணீா்பந்தல் அருகேயுள்ள எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முத்துசாமி மனைவி செல்வி (55) என்பவரது 3 பவுன் தங்க சங்கிலியையும் மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சுசீலா, செல்வி ஆகியோா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.