முகப்பு
சேலம்

கணவருக்கு 15 பவுன் மாலை அணிவித்த பெண் காவலரிடம் உயரதிகாரிகள் விசாரணை

சேலத்தில் கணவருக்கு தங்க மாலை அணிவித்த விவகாரத்தில் பெண் காவலருக்கு குறிப்பாணை (மெமோ) வழங்கி உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 5 ஜூன் 2026, 7:01 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

சேலத்தில் கணவருக்கு தங்க மாலை அணிவித்த விவகாரத்தில் பெண் காவலருக்கு குறிப்பாணை (மெமோ) வழங்கி உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்ட குற்றப் பிரிவில் பணிபுரிந்து வரும் பெண் காவலா், கடந்த 1 ஆம் தேதி தனது கணவா் பெருமாளின் (40) பிறந்த நாள் விழாவில் 15 பவுன் தங்க செயினை கணவருக்கு மாலையாக அணிவித்தாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடா்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பெண் காவலருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவருக்கு அணிவித்த தங்க மாலையின் எடை எவ்வளவு, எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement