புதுக்கோட்டை

புதுகை அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் காய்ச்சலால் சாவு

DIN

புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் பிரசவித்த பெண் மர்மக்காய்ச்சலால் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, சிவபுரம் இளங்குடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்  மனைவி சத்யா (24).  நிறைமாதக் கர்ப்பிணியான  இவர் கடந்த 7-ஆம்  தேதி  புதுக்கோட்டையில் உள்ள அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் அதே நாளில்  பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து சத்யா அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சத்யாவின் உறவினர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி கதறியழுதது அங்கிருந்த அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT