புதுக்கோட்டை

டிச.15-இல் உண்ணாவிரதம்: கட்டடப் பொறியாளர்கள் தீர்மானம்

DIN

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, பொன்னமராவதி கட்டடப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் விஎன்ஆர்.நாகராஜன் தெரிவித்துள்ளதாவது:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வரும் 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.  இதில், மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியாளர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், லாரி உரிமையாளர்கள், கட்டடப் பொருள்கள் விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். போராட்டத்துக்கு, மாநில தலைவர் சி.தில்லைராஜன் தலைமை வகிக்கிறார் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT