புதுக்கோட்டை

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுகை வேளாண் இணை இயக்குநர் அலுவலகக் கூட்ட அரங்கில் செயலர் அ. நவீன் சேட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,வேளாண் இணை இயக்குநர் நா. அண்ணாமலை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  20 விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான், கைத்தெளிப்பான், உளுந்து விதை, டி.ஏ.பி. உரம் போன்ற இடுபொருட்களை வழங்கிப் பேசியது:
வேளாண் துறை மானியம்,  தொழில்நுட்பங்கள், இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார விரிவாக்க மையங்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
விவசாயிகளின் சார்பில் இந்திய விவசாயிகள் மாநிலத் தலைவர் ஜி.எஸ். தனபதி,நிர்வாகிகள் காசிராஜன், கனகராஜன்,  அருணாசலம்,சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி, திருப்பதி,ஆர்.சேவியர்,க.மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT