ஆடி அமாவாசையையொட்டி பொன்னமராவதி ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பூஜையின் தொடக்கமாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 301 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றினர். அதுபோல வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில், ஜெ.ஜெ.நகர் முனீஸ்வரர் கோயில், வையாபுரி முனீஸ்வரர் கோயில், தேனிமலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.