அன்னவாசல் அருகே அனுமதியின்றி மது விற்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அன்னவாசல் எடத்தெரு ரைஸ்மில் அருகே அனுமதியின்றி மதுபாட்டில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அன்னவாசல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தச்சம்பட்டியை சேர்ந்த ரங்கையா மகன் வெள்ளைச்சாமி (29) அனுமதியின்றி மதுபாட்டில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 9 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார் வெள்ளைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.