புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே பேருந்து மோதி இருவர் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

DIN

புதுக்கோட்டை அருகே பேருந்து மோதி இருவர் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஆலங்குடி அருகிலுள்ள மேலநெம்மகோட்டையைச் சேர்ந்தவர்  கே.செல்வம்(40)அதே ஊரைச் சேர்ந்த எம்.யுவராஜ்(15) ஆகிய இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து மேலநெம்மகோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுபோது, அசோக்நகர் அருகே எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கணேஷ்நகர் போலீஸார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரான மல்லியாநத்தம் பகுதியைச் சேர்ந்த அன்பழகனை(40) கைது செய்தனர். இவ்விபத்து தொடர்பான வழக்கு  புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில்,  விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அன்பழகனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.4ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜன் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT