புதுக்கோட்டை

தவ்ஹீத் ஜமா அத் கிளைக் கூட்டம்

DIN

புதுகை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை பொதுக்குழு கூட்டம் பள்ளிவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் முபாரக் அலி மற்றும் துணை செயலாளர் ரபீக் ராஜா தலைமை வகித்தனர். 
புதிய நிர்வாகிகளாக தலைவர் சபிபுல்லா, செயலாளர் முகமது யூசுப் ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
கூட்டத்தில், முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து காலடிப்பட்டி சத்திரம் வரை தார்ச்சாலை போடாமல் பணிகள் கிடப்பில் உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முக்கண்ணாமலைப்பட்டியில் அரசு உயர்நிலைபள்ளியை மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால் இட வசதி இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். 
ஆகவே இதற்கு சம்மந்தபட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை   எடுத்து புதிய  வகுப்பறை கட்டடம் அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT