புதுக்கோட்டை

பொன்னமராவதியில் 15-இல் விநாயகர் சிலைகள் கரைப்பு

DIN

பொன்னமராவதியில் விநாயகர் ஊர்வலம் மற்றும் விநாயகர் சிலை கரைக்கும் வைபவம் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. 
பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் சிவன் கோயில் திடலில் 13 ஆம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை விழாக்குழு சார்பில் அன்னதானம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சனிக்கிழமை மாலை விநாயகர் சிலைகளது ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம்.ராஜா ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். 
பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி முன்னிலை வகிக்கிறார். ஊர்வலத்தில் நேதாஜி இளைஞர் மன்றம், இந்திரா நகர், பூக்குடி வீதி, பாலமேடு வீதி, நகைக்கடை பஜார் உள்ளிட்ட 15 விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து அமரகண்டான் குளத்தில் கரைக்கும் வைபவம் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT