புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கபடிப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

DIN

பொன்னமராவதி அருகே கேசராபட்டி, காரையூர் எம்.புதூர், எல்லைக்காட்டில் கபடிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
கேசராபட்டியில் நடைபெற்ற கபடிப் போட்டியில் 19 அணியினர் பங்கேற்றனர். முதல் பரிசை கேசராபட்டி எஸ்கேபி அணியினரும், இரண்டாம் பரிசு கட்டுக்குடிப்பட்டி அணியிர், மூன்றாம் பரிசு சேது நண்பர்கள் அணியினர் பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கே.செல்வராஜன் பரிசு வழங்கினார்.
எம்.புதூரில் நடைபெற்ற கபடிப் போட்டியில் சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை குறிச்சிப்பட்டி அணியும், இரண்டாமிடத்தை பெருமாநாடு அணி, மூன்றாமிடத்தை கரையாம்பட்டி அணி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது.
அதேபோல, கண்டியாநத்தம் எல்லைக்காட்டில் நடைபெற்ற கபடிப் போட்டியில் 43 அணிகள் விளையாடின. முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் தி.புதுப்பட்டி அணியும், இரண்டாம் பரிசு காளாப்பூர் அணி, மூன்றாம் பரிசு புதுக்கோட்டை மாங்குடி அணி பெற்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT