புதுக்கோட்டை

கீரனூர், புதுகைக்குத் தடையில்லா காவிரிக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை

DIN

புதுக்கோட்டை நகரம் மற்றும் கீரனூர் பகுதிகளுக்கு தடையில்லா காவிரிக் குடிநீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்  திருச்சி மக்களவைத் தொகுதி  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான்.
 கீரனூர் பேரூராட்சிக்குள்பட்ட கடைவீதி, காந்தி சிலை, தேரடி உள்ளிட்ட 15 வார்டுகளிலும்,  மாலையில் புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்களிலும் வாக்கு சேகரித்த சாருபாலா  ஆர். தொண்டைமான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.  
அப்போது கீரனூர்,புதுக்கோட்டை நகர்ப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தடையில்லா காவிரிக்குடிநீர் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். மக்களவைத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
அவருடன், அமமுக பிரமுகர்கள் குளத்தூர் பிரபாகரன், மங்கதேவன்பட்டி சுப்பிரமணி, அண்ணாதுரை உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT