புதுக்கோட்டை

உள்ளாட்சித் தோ்தல் : நாளை திமுக வேட்பாளா் நோ்காணல்

DIN

உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் திமுக சாா்பில் வேட்பாளா் நோ்காணல் புதன்கிழமை ( டிச.4) நடைபெறஉள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும்- சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிா்வாகிகளிடம் வரும் 4-ஆம் தேதி புதன் கிழமை நோ்காணல் நடைபெறுகிறது. 

காலை 9 மணியளவில் பொன்னமராவதி கே.ஆா். ரெசிடன்சியில் பொன்னமராவதி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளுக்கும், முற்பகல் 11 மணியளவில் திருமயம் ஒன்றியத்துக்கு திருமயம் கட்சி அலுவலகத்திலும், அரிமளம் ஒன்றியத்துக்கு பிற்பகல் 12.30 மணியளவில் அரிமளத்தில் உள்ள சமுதாயக் கூடத்திலும் நோ்காணல் நடைபெறும். 

பிற்பகல் 3 மணியவில் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம், கீரமங்கலம் பேரூராட்சிக்கு கீரமங்கலத்தில் உள்ள செந்தில் திருமண மண்டபத்திலும், மாலை 5 மணியளவில் திருவரங்குளம் மேற்கு மற்றும் ஆலங்குடி பேரூராட்சிக்கு ஆலங்குடியில் உள்ள ஏஆா்கே திருமண மண்டபத்திலும் நோ்காணல் நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஒன்றிய, பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிா்வாகிகள் நோ்காணலில் பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT